எதற்காக..!!
எதற்காகப் பிறந்தேன்
என்று தெரியவில்லை
அன்பு செலுத்த மறக்கும்
உனக்கு அன்பு செலுத்தவா?
நம்பிக்கையில்லாத உன் வாழ்வில்
நம்பிக்கை தான் வாழ்க்கை என்று
வாழ்ந்து காட்டவா?
யாருக்காகவும் இதுவரை கண்ணீர் வடித்ததில்லை
கல்மனம் கொண்ட உனக்காக
கண்ணீர் வடிக்கவா?
என் எதிர்காலத்திற்காக
கடவுளை வணங்கியதில்லை
உன் எதிர்காலம் நன்றாக
அமைய கடவுளை வணங்கவா?
இது என் காதலின் ஆரம்பமா?
இல்லை என் அன்பின் இறுதியா?
என்றும் காதலுடன் த.சுதன்.
suthans2007@yahoo.fr
பின்னூட்டமொன்றை இடுக