விதி செய்த பாவம்

Posted in Uncategorized on மே 6, 2008 by suthanx

நான் செய்த பாவம்
உன்னை சந்தித்தது..!!
நீ செய்த பவம்
என்னை  நேசித்தது..!!
விதி செய்த பாவம்
விளையாடிப் பார்த்தது..!!

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

இதய வாசல் திறப்பாயா..!

Posted in *! இதய வாசல் !* on ஏப்ரல் 4, 2008 by suthanx

என்னவளே ஏன்
என்னை மறந்தாய்
என் இனியவளே ஏன்
என்னை பிரிந்தாய்

எங்கிருந்தாலும்
நீ வாழ்கவென
வாழ்த்திட என்
உதடுகள் அசைந்தாலும்

உள்ளம் ஊமையாய்
தினமும் அழுகிறதே
உணர்வுகள் வெடித்து சிதற்கிறதே
உயிரும் விடை பெற துடிக்கிறதே

உறக்கம் மறந்து போனதே
இரக்கம் காட்ட மாட்டாயா
இதய வாசல் திறப்பாயா..? 

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

காதலே …என் காதலே… !

Posted in *! என் காதலே !* on பெப்ரவரி 15, 2008 by suthanx
  தீர்க்கமாய் மறுக்கிறாய் நீ
  தாபமாய் தவிக்கறது மனது…  நீ சொல்லாமலே இருந்துவிடு
  நீ என்னைக்காதலிக்கிறாய் என்ற
  நினைப்பிலேயே இருந்துவிடுகிறேன்
  நீ சொல்லாமலே இரு….

  ஆம் அல்லது இல்லை
  என்பதை விட-உன்
  மெளனம் அழகாய் சொல்கிறது
  உன் காதலை…..

  வானம் நீர் தெளிக்க
  காகங்கள் பூபாளமிசைக்க
  நீ கோலமிட்டுக்கொண்டிருந்தாய்-
  என் கவிதை காட்சியாக்கப்பட்டது….

  நீ சொல்லாவிட்டாலும்
  ஊர் சொல்லும் நம் காதலை….

  என் கனவுக்குள் நீ
  உன் கண்களுக்குள் நான்
  நம் நடுவே காதல்
  யாருக்கும் புலப்படாமல்-
  பூவுக்குள் நுழையும் காற்றுபோல்…..

  காற்று இசையமைக்க
  பறவைகள் பாட்டிசைக்க
  மென்தூரலில் நாம் மரமொதுங்க…
  வானவில் பார்த்திருந்த அம் மாலையில்
  நீ காதலைச்சொன்னாய்
  உலகம் நிசப்தமானது…….
 

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

உன்னைத் தேடும் என் இதயம்..!!

Posted in *! இதயம் !*, Uncategorized on பெப்ரவரி 9, 2008 by suthanx
உன்னைத் தேடும் என் இதயம் தினம் கண்ணீர் வடிக்கின்றது
உன் எண்ணங்களை சுமந்த என் மனம் சோகங்களால் வாடி நிற்கிறது
ஒரு முறையாவது உன்னுடன் பேசக்கிடைக்காதா என்று – உன்
விழிகள் சந்திக்காத போதும் வார்த்தைகளாவது
எனை ஆறுதல்படுத்தாதா என.

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

கரை சேரா கவிதைகள்…!!

Posted in *! கரை சேரா!* on பெப்ரவரி 9, 2008 by suthanx

பக்கங்கள் கிறுக்குகிறேன் -
உன்னோடு பழகிய நினைவுகளை -
நினைவுகளை மீட்டுவதிலும்
தனி சுகம்

உன்னைப் பற்றி
நான் எழுதியவை
இன்னும் கரை சேரா
கவிதைகளாய்
தத்தளித்துக் கொண்டிருக்கின்றன..


என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

மனசு மட்டும்..!!

Posted in *! மனசு மட்டும் !* on பெப்ரவரி 1, 2008 by suthanx

ஜன்னலில் பார்கிறேன்
காய்கிறது நிலவு
என்னையும் அங்கே
அழைகிறது உறவு

யாடைகள் செய்து
பார்கிறது விண்மீன்
யாரையோ இங்கே
தேடுறது கண்மீன்

மனசு மட்டும்
மாறவே இல்லையே
மறுபடியும் மறுபடியும்
உன்னையே கேட்கிறது

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

என் கடைசி ஆசை…!

Posted in *!என் கடைசி ஆசை!* on டிசம்பர் 6, 2007 by suthanx

என் கடைசி ஆசை…!

நான் இறந்து விட்ட பிறகு..!

என் இதயத்தை எடுத்து இதயமே இல்லாத

என் காதலிக்கு கொடுங்கள்…!

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

காலமெல்லாம் நீ வேண்டும்..!!

Posted in *! காலமெல்லாம் !* on நவம்பர் 10, 2007 by suthanx

காலமெல்லாம் நீ..வேண்டும்

என்னதான் இருக்கு உன்னிடம்
மீண்டும் மீண்டும்..சிந்தித்தால்
விடை தெரியவில்லை.
காரணம்…எதை என்று
சொல்வது
வாழ்க்கை ஒடும்போதும்
உன் நினைவுகள்தான்…
என் இதயத்துடிப்பில்
அதிகமாய் ஓடுகின்றது.
ஏன்…
என் நாடித்துடிப்பிலும் கூட
நீயே…தான் வாழ்கின்றாய்
சோகம் வாட்டும் போதும்.
ஓ… என்ன சோகம் என்கின்றாயா….?

உன்னை பிரிந்த சோகம்…
வாட்டும் போதும்.
உன் சுகமான நினைவுகள்
என்னை சுகமாக்கி…
செல்கின்றது.

என் செல்லமே..

இடை வெளி இல்லா..
மழை நீர்..போல்
என் வாழ்வில் நீ..வேண்டும்.

எப்பவும் எனக்கு சாலிக்காத..
பொருள்.. அது நீ..என்பதால்.
சலிப்பே…இல்லாமல்.
உன் இதழ் சிந்தும் கவிதையில்
காலமெல்லாம்.
நான் வாழ..என்னருகில்
நீ..வேண்டும்.

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

காத்திருப்பேன் என்றும் உனக்காக…!

Posted in *!காத்திருப்பேன் என் on நவம்பர் 10, 2007 by suthanx

நீ சொன்ன
அந்த ஒரு
வார்த்தை
எனக்குப் போதுமடி
காத்திருப்பேன் என்றும்
உனக்காக!

நீ சொன்னாய்
எப்பவும் எனக்காய்
காத்திருப்பேன் என
நம்புகிறேன் உன்னை!!

இனி நீ வருடங்கள்
பேசாவிட்டாலும் உன்
அந்த ஓர்
வார்த்தையில் வாழ்வேன்
என்றாவது நீ சொன்ன
அந்த சேரும் நாள்
வரும் வரை..

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

மனதில் நீ..!

Posted in *!மனதில் நீ!* on நவம்பர் 9, 2007 by suthanx

என்னை இழக்கப் போகிறேன்
உன்னை இழக்க முடியாமல்..!

நீயாக வந்தாய்
நான் நீயாக மறினேன் 
நீயாக விலகுகிறாய்
முடியாதடி உன்னை பிரிய
அடுத்த நிமிடமும்..!

நான் வாழ்வது சந்தேகமடி உயிரே
இன்னுமொரு நிமிடம் நான் வாழ்வது 
நீ என்னிடம் வருவாய் மீண்டும் என்று
உயிரே உயிர் வாழ்கிறேன் உனக்காகவே…!

மறக்க என்னால் முடிந்து இருந்தால்
மாண்டு போக முயற்சித்திருப்பேனே
மூன்று முறை முயற்சி செய்தும் முடியவில்லை என்னால்
முடிவில்லா துக்கத்தை முழுசாக அடைவதற்கு
செயற்கையின் சாவை செய்யவே மாட்டேன்
செய்துள்ளேன் சத்தியம் இயற்கையின் இறப்பை
இதயத்தால் ஏற்பேன் இன்றாவது வருமென்று
இறைவனே உனக்கும் இந்த ஏழையை
இன்னுமா பிடிக்கவில்லை
உன்னிடம் வருவதற்கு உயிரொன்று ஏங்குது இங்கு..!

மனதில் நீ!
உயிரில் நீ…!
உதிரத்தில் நீ…!
எல்லாமே உன்னோடு…..!
என் மரணத்தை தவிர..!

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com