
காதலைச் சொல்லு முன்...!
என் இதழ்களைக் கேட்டுப் பார்
என் நெஞ்சம் சொல்லும்!!!
என் இமைகளைக் கேட்டுப் பார்
என் கனவுகள் சொல்லும்!!!
என் இதயத்தைக் கேட்டுப் பார்
என் ஆசைகள் சொல்லும்!!!
என் இரவைக் கேட்டுப் பார்
உனக்கான என் காத்திருப்புக்களைச் சொல்லும்!!!
என் காதலை நீ மறுத்த பின்...!
என் இதழ்களைக் கேட்டுப் பார்
என் நெஞ்சத்தின் வேதனை சொல்லும்!!!
என் இமைகளைக் கேட்டுப் பார்
என் கனவுகள் கலைந்த விதம் சொல்லும்!!!
என் இதயத்தைக் கேட்டுப் பார்
என் ஆசைகள் சிதைந்த விதம் சொல்லும்!!!
என் இரவைக் கேட்டுப் பார்
கண்ணீர் வடிக்கும்
என் உன் நினைவுகளைச் சொல்லும்!!!
என்றும் காதலுடன்
சுதன்.
|
இந்த இடுகை அக்டோபர் 10, 2007 அன்று 6:42 பிற்பகல் மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு கேட்டுப் பார்..!!! என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS 2.0 செய்தியோடையூடாகத் தொடரலாம்
நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.